Friday, November 18, 2011

விலை வாசி குறையுமா ...? வாய்ப்பிருக்கிறதா ...?






இப்பொழுது எங்கே பார்த்தாலும் , எதை எடுத்தாலும் விலை அதிகமாகி கொண்டே தான் போகிறது .   எந்த பொருளும் விலை குறைந்த மாதிரி இல்லை என புலம்பும் அநேகரில் நானும் ஒருவன் .   ஒவ்வொரு முறை விலை கூடும் போதும் , விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது என குற்றம் சொல்லுவோரும் உள்ளனர் .  உண்மையில் விலைவாசி குறையுமா ....? அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது டஜன் கேள்வி .

 ஒரு பொருளின் விலை எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் , அதன் தேவை ( Demand ) மற்றும் உற்பத்தியை ( Supply ) பொருத்தே.  ஒரு சின்ன உதாரணம் காண்போம் ..


10  பேருக்கு ஒரு நாள் அரிசி தேவை   -  10  கிலோ என்று வைத்து கொள்ளுவோம் .   ஆனால் 30  கிலோ அரிசி உற்பத்தி செய்கிறோம் என்றால் உற்பத்தியான அரிசி விற்பனை ஆகவேண்டும் ( விற்பனை ஆனால் தான் விற்றவனும் , உருவாக்கியவனும் சாப்பிடமுடியும் )  என்பதற்காக அதனுடைய விலை சற்றே குறைத்து விற்பனை செய்யப்படும் . 


ஆனால் அதே நேரத்தில் உற்பத்தி 5 கிலோ தான் என்று வைத்துக்கொள்ளுங்கள் .  அதனுடைய தேவை அதிகரிப்பதாலும் ,  உற்பத்தி குறைந்து இருப்பதினாலும் விலை அதிகமாகி விடும் . 


 இது ஒரு சின்ன உதாரணம் தான் .  மிக முக்கியமாக தேவை அதிகரிக்கிறது ஆனால் உற்பத்தி குறைகிறது .   இது தான் சாராம்சம் ...  சரி .. இதற்க்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போமே ..!

 மக்கள் தொகை பெருக்கம் :   


 இது ஒரு முக்கியமான காரணம் .   ஒவ்வொரு ஆண்டிலும் மக்கள் தொகை இந்தியாவில் பெருகி வருகிறது .  தற்பொழுது 121  கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை வெகு விரைவில் சீனாவை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .  ஒவ்வொரு குழந்தை பிறக்க பிறக்க தேவை அதிகமாகிறது என்று அர்த்தம் .  அதனால் தான் குழந்தை கட்டுப்பாட்டு முறைகள் அரசால் மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டு வருகிறது .  ஆனால் வழக்கம் போல நாம் அதை கண்டுகொள்வதில்லை என்பது வேறு விஷயம் .... 

 விவசாயத்தின் தேக்கம்  :  


நாட்டின் பல இடங்களில் விவசாயம் அழிந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் .  ஏன் எனில் விவசாயத்தினால் கிடைக்கும் வருமானம் போதாத காரணத்தினால் வேறு வேலைகளை தேடி விவசாயிகள் பயணமாகிறார்கள் .   அதனால் தான் அரசும் இயன்ற வரையில் இலவச மின்சாரம் , உர மானியம் என்றெல்லாம் பல கொடுக்கிறது .  காரணம் அப்படியாவது விவசாயம் அழியாமல் இருந்தால் உற்பத்தி பெருகுமே ...


ரியல் எஸ்டேட் மோகம்  :


தற்பொழுது நாட்டை பிடித்திருக்கும் மிகப் பெரிய பகைமை இது தான் .   வீடு கட்ட இடம் என்ற நிலை போய் ,  நிலம் வாங்கி விற்பது ஒரு தொழிலாய் மாறின பிறகு , என்னமோ அழிவது எல்லாம் விளை நிலங்கள் தான் .   அதில் தான் நல்ல தண்ணீர் , பசுமை இருப்பதால் விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன.  மறைமுகமாக உற்பத்தி அழிக்கப்படுகின்றன ...  


 சர்வதேச சந்தையில் எரிபொருளின் ஏற்ற / இறக்கங்கள் : 
நமது எரிபொருள் தேவை சர்வதேச சந்தையை நம்பி இருக்கிற படியால் , எரிபொருள் விலை உயருகிற பொழுது , அதனோடு கூட சேர்ந்து அது சம்பந்தப்பட்ட விலையும் உயர்கிறது . 

நாம் என்ன செய்யலாம்  :-
  1. கூடுமானவரை ..... நாம் இருவர் ...நமக்கு ஒருவர் .....! சரி பரவாயில்லை நமக்கு இருவர் ....
  2. விவசாய நிலம் இருக்குமானால் தலையே போனாலும் விற்பனை செய்ய வேண்டாமே ... ஏதாவது விவசாயம் நடக்கட்டும் .
  3. ரியல் எஸ்டேட் தொழிலை ஆதரிக்கும் வகையில் அதிக நிலங்கள் வேண்டாமே ...
 டிஸ்கி :  இன்னும் சில வருடங்களில் விலை பட்டியல் ...
ஒரு லிட்டர் பெட்ரோல்         -    250  ருபாய் .
ஒரு கிலோ அரிசி                    -      100  ருபாய் 
ஒரு கிலோ உப்பு                     -        50   ருபாய்  ( இது கூடவா ..!)

"SIGN OUT"செய்யாமல் வேறு கணக்கில் உள்ள ஈமெயில்களை GMAILலில் படிக்க



நீங்கள்  இரண்டு  மூன்று  ஜிமெயில்  கணக்கு  வைச்சுருகீங்க,ஒன்னு  உங்களோட , மற்றது  உங்கள்  வேலைக்காக    என்று  வைத்து கொள்வோம்.  ஒரு  கணக்குக்குள்  நுழைந்து " Sign out    "  செய்யாமல் மற்ற கணக்குக்குள் சென்று அந்த கணக்கின் இன்பாக்ஸ் ஈமெயில்களை படிக்க முடிந்தால்  எவ்வளவு  இருக்கும்.  இனிமேல்  அப்படி  படிக்க முடியும் என்றால் நம்புவீர்களா." Email delegation  "என்று  ஜிமெயில்  அறிமுக படுத்திருக்கும் முறைப்படி  நீங்கள் அப்படி படிக்க முடியும்.வாங்க எப்படி என்று பாப்போம்.



நீங்கள் வைத்திருக்கும் Secondary Email  Accountக்குள் (நீங்கள் வைத்திருக்கும் இரண்டாவது கணக்கு) நுழைந்து Mail Settings –> Accounts –> Grant Access to your account -Add another Account -சென்று அங்கு நீங்கள் வைத்திருக்கும் Personal Account ஈமெயில் முகவரியை தந்து விடுங்கள். உங்களது Personal Account ஈமெயில் முகவரிக்கு ஒரு Confirmation email வரும்.அதனை Accept  செய்து விடுங்கள் வேலை முடிந்தது.இதே போல் பல ஈமெயில் முகவரிகளை நீங்கள் இணைத்து கொள்ள முடியும்.இப்பொழுது உங்களது மெயின் ஈமெயில் கணக்குள் நுழைந்தால் இடது ஓரம் இருக்கும் "Switch account" மூலம் நீங்கள் Sign out செய்யாமல் பல ஈமெயில் கணக்குக்குள் நுழைந்து ஈமெயில்களை படிக்க முடியும். 

Wednesday, November 9, 2011

போதி தருமன்




போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்


"முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்." என்று பல தமிழர்கள் பெருமைப் படுகின்றனர். "போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக" கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர். அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது. முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்களை மறைப்பது யார் என்பது, இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு புரியும்.


குங்ஃபூவும் போதி தருமனும்
போதி தருமன் vs prinze ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று

சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)

டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.

3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān

டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.
6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)
8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.
9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.
10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.